சித்தேரிக்கரை சிவசக்தி மாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை
ADDED :4 hours ago
விழுப்புரம்: விழுப்புரம் சித்தேரிக்கரை சிவசக்தி மாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை நடந்தது. இக்கோவிலில் 51வது ஆண்டு சாகை வார்த்தல் திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு தாண்டேஸ்வரர் ஆலயத்திலிருந்து பக்தர்களின் பால்குடம் ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 7:00 மணிக்கு விளக்கு பூஜை நடந்தது. திரளான பெண்கள் விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து இன்று 2ம் தேதி மதியம் 12:00 மணிக்கு செடல் உற்சவமும், 2:00 மணிக்கு சாகை வார்த்தலும், மாலை 5:00 மணிக்கு உறியடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.