திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் ஏயர்கோன் கலிக்காம நாயனார் குருபூஜை
ADDED :1 hours ago
திருப்பூர்: ஆனி மாத ரேவதி நட்சத்திர நாளான நேற்று, திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், ஏயர்கோன் கலிக்காம நாயனார் குருபூஜை நடந்தது. காலை, 10:30 மணிக்கு, சிவாச்சாரியார்கள், கல்மண்டபத்தில் உள்ள, நாயனார் மூலவர் சிலைக்கு அபிேஷகம் செய்தனர்; தொடர்ந்து அலங்காரபூஜை நடந்தது. சிவனடியார்கள், திருப்பூர் அர்த்தஜாம பூஜை அடியார்கள் திருக்கூட்டம், மாணிக்கவாசகர் மன்றத்தினர், தேவாரம், திருவாசகம் பாராயணம் செய்து வழிபட்டனர்.