உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அத்தியூதது பகவதி அம்மன் கோயிலில் மண்டல பூஜை

அத்தியூதது பகவதி அம்மன் கோயிலில் மண்டல பூஜை

தேவிபட்டினம்; தேவிபட்டினம் அருகே, அத்தியூத்து பகவதி அம்மன், உதிரமுடைய அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் மே 12 ல் நடந்தது. அதைத்தொடர்ந்து, தினமும் மூலவருக்கு அபிஷேகங்கள் நடைபெற்று தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன. இந்த நிலையில், 45 நாட்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு மண்டல பூஜை நேற்று நடைபெற்றது. முன்னதாக, காலை 8:00 மணிக்கு கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள் நடந்தது. பின்னர், யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர் மூலம், மூலவர்கள் பகவதி அம்மன், உதிரமுடைய அய்யனார், நல்ல சேவுக பெருமான், காளியம்மன், கருப்பணசாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற தீப ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் பகவதி அம்மன் உள் வீதி புறப்பாடு நடந்தது. விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள் மற்றும் குலதெய்வ குடிமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !