உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிவாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

ஆதிவாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

விழுப்புரம்: விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஆதிவாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

அதனையொட்டி, பிரதோஷ நாயகரான நந்தி சுவாமிக்கு நேற்று மாலை 4:00 மணிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து மூலவருக்கும் அபிேஷகம் நடந்தது.

5:00 மணிக்கு, நந்தி பகவான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதையடுத்து, 6:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. பின், நந்தி பகவான் கோவில் உட்பிரகாரம் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது.

திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதே போல், சாலை அகரத்தில் உள்ள ஸ்ரீ அக்னிபுரீஸ்வரர் கோவிலிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !