அச்சிறுபாக்கம் வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக பந்தக்கால் விழா
ADDED :1 hours ago
அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கம் அருகே ராமாபுரம் அடுத்த பாதிரி கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி பந்தக்கால் நடும் விழா, நேற்று நடந்தது.
அச்சிறுபாக்கம் அருகே பாதிரி கிராமத்தில் மிகவும் பழமையான பூமி நீளா பெருந்தேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்துவதற்காக கோவில் பாலாலயம் செய்யப்பட்டு, சில ஆண்டுகளாக திருப்பணிகள் நடந்து வந்தன. திருப்பணிகள் அனைத்தும் முடிவுற்று, வரும் ஆக., 23ம் தேதி, மஹா கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. இதை முன்னிட்டு, கும்பாபிஷேக பந்தக்கால் மற்றும் யாகசாலை பந்தக்கால் நடும் விழா நடந்தது.