உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் மங்களாசாசனம்

ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் மங்களாசாசனம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழா ஐந்தாம் நாளான இன்று காலை பெரியாழ்வார் மங்களாசாசனமும், இரவில் ஐந்து கருட சேவையும் நடக்கிறது ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


இக்கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா ஆக.6ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஐந்தாம் நாளான இன்று காலை ஆடிப்பூர பந்தலில் பெரியாழ்வார் மங்களா சாசனம் நடந்தது. முதலில் பெரியாழ்வார் எழுந்தருள, பின்னர் பெரிய பெருமாள், சுந்தரராஜ பெருமாள், சீனிவாச பெருமாள், திருத்தங்கல் அப்பன், ஆண்டாளுடன் ரெங்க மன்னார் எழுந்தருளினர். அங்கு பெரியாழ்வார் மங்காள சாசனம் செய்து வைத்தார். காலை 10:00 மணிக்கு துவங்கிய மங்களாசாசனம் மதியம் 2:00 மணி வரை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு 10:00 மணிக்கு ஐந்து கருட சேவை துவங்கும். இதில் ஆண்டாள் பெரிய அன்ன வாகனத்திலும், ரங்க மன்னார், பெரிய பெருமாள், சுந்தரராஜ பெருமாள், சீனிவாச பெருமாள், திருத்தங்கள் அப்பன் ஆகியோர் கருட வாகனத்திலும், பெரியாழ்வார் சிறிய அன்ன வாகனத்திலும் எழுந்தருளி மாடவீதிகள் மற்றும் ரத வீதிகளை சுற்றி வலம் வருவர்.  ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்கரை அம்மாள் தலைமையில் கோயில் பட்டர்கள், அறநிலையத்துறையினர் செய்திருந்தனர். டி.எஸ்.பி. பாலச்சந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !