புதுப்பாளையம் குருநாத சுவாமி கோவில் தேரோட்டம் கோலாகலம்
ADDED :28 minutes ago
அந்தியூர்: ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த புதுப்பாளையத்தில் பழமை வாய்ந்த குருநாத சுவாமி கோவில் உள்ளது. ஆண்டுதோறும் ஆடி மாதம் நடக்கும் திருவிழா நடக்கும். நேற்று முக்கிய நிகழ்வான பெருந்தேர்த் திருவிழா நடந்தது. சப்பார தேரில் காமாட்சியம்மன், மகமேரு தேர்களில் பெருமாள் மற்றும்குருநாத சுவாமியும் எழுந்தருளி அருள் பாலித்தனர். திருவிழாவையொட்டி நடந்த குதிரை, மாட்டு சந்தைகளுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, ராஜஸ்தான் மாநிலங்களிலிருந்து, உயர்ரக மார்வார், கத்தியவார் குதிரைகள் மற்றும் நாட்டு குதிரை, மட்டக்குதிரைகள், உயர்ரக நாட்டு மாடுகள், மலை மாடுகள், ஜெர்சி இன மாடுகளும் விற்பனைக்கும், கண்காட்சிக்கும் கொண்டு வரப்பட்டன. உள்நாட்டு, வெளிநாட்டு புறா, கிளிகள், கோழி, சேவல்கள் கண்காட்சிக்காக கொண்டு வரப்பட்டன.