சூளாங்குறிச்சியில் உடல் மாரியம்மன் கோவிலில் சுவாமி வீதியுலா
கள்ளக்குறிச்சி: சூளாங்குறிச்சியில் உடல் மாரியம்மன் சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த சூளாங்குறிச்சியில் உள்ள உடல் மாரியம்மன் கோவிலில் ஊரணி பொங்கல் மற்றும் கூழ் ஊற்றுதல் திருவிழா கடந்த 7ம் தேதி சக்தி அழைத்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து, காப்பு கட்டுதல், சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக ஆராதனை நிகழ்ச்சிகள் நடந்தது. 10ம் தேதி நடந்த ஊரணி பொங்கல் விழாவில், திரளான பெண்கள் பங்கேற்று பொங்கல் வைத்து சுவாமிக்கு படையலிட்டனர். 11ம் தேதி நடந்த சாகை வார்த்தல் நிகழ்ச்சியில் பொதுமக்கள் கூழ் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு நடந்து சென்று கொப்பரையில் கொட்டினர். அங்கு சிறப்பு பூஜைகள் செய்த பிறகு பொதுமக்கள் அனைவருக்கும் கூழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து, மாரியம்மன் சுவாமி வீதியுலா நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.