ஏகாம்பரேஸ்வரர் தருமராஜா கோவிலில் இன்று, நாளை மஹா சண்டி ஹோமம்
சிவாஜிநகர்: பெங்களூரு சிவாஜிந கர் ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் தருமராஜா கோவிலில் இன்றும், நாளையும் ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி ஆடிப்பூர மஹா சண்டி ஹோமம் நடக்கிறது.
முதல் நாளான இன்று மாலையில் ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் மற்றும் ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி அம்பிகை சன்னிதியில் அனுக்ஞை, மஹா சங்கல்பம், கணபதி பூஜை, புண்யாஹவசனம், ஷோடசமாதருகா பூஜை, தீப பூஜை.
புஸ்தக பூஜை, ஸ்ரீசண்டி கலச பூஜை, துர்கா சப்தசதி பாராயணம், கணபதி ஹோமம், நவாக் ஷரி ஹோமம், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி, தீபாராதனை, உபசாரங்கள், பிரசாத வினியோகம், 64 யோகினி 64 பைரவ பலி பூஜை நடக்கின்றன.
இரண்டாம் நாளான நாளை, காலையில் யாகசாலை பூ ஜை, பாராயணம், துர்கா சப்தசதி, 13 அத்தியாய ஹோமம், கன்யா சுவாசினி வடுக பிரம்சாரி பூஜை, மங்கள திரவிய சமர்ப்பணம், வசோத்தாரா, மஹா பூர்ணாஹூதி, தீபாராதனை, கலசம் புறப்பாடு, ஸ்ரீதுர்கா பரமேஸ்வரி அம்பிகைக்கு அபிஷேகம், மஹா தீபாராதனை, பிரசாதம் வழங்கப்படுகிறது என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.