புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் சிறப்பு பூஜை
ADDED :9 hours ago
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், சந்தான கோபாலகிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
இதையொட்டி, நேற்று முன்தினம் காலை 8:00 மணியளவில் மூலவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, காலை 10:00 மணியளவில் முன்மண்டபத்தில் குழந்தை வரம் தரும் சந்தான கோபாலகிருஷ்ணர் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், இளநீர், திரவியப்பொடி ஆகியவைகளால் சிறப்பு அபிேஷகம்; பகல் 11:00 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.