உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைஷ்ணவ சமாஜம் சார்பில் துடியலுாரில் ஐம்பெரும் விழா

வைஷ்ணவ சமாஜம் சார்பில் துடியலுாரில் ஐம்பெரும் விழா

  பெ.நா.பாளையம்: கோவை சாத்தாத வைஷ்ணவ சமாஜம் சார்பில், ஐம்பெரும் விழா துடியலுார் அருகே நடந்தது.


கடந்தாண்டு, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, ஊக்கப்பரிசு வழங்கும் விழா, 16ம் ஆண்டு ஆடிப்பூர விழா, மறைந்த முன்னாள் நிர்வாகிகள் படத்திறப்பு விழா உட்பட ஐம்பெரும் விழா நடந்தது. கோட்டூர் ஆதிசன் ராமானுஜ தாசன் திருவாதாரணை நடந்தது. செல்வராஜ் வரவேற்றார். ஆடிட்டர் வெங்கடேசன் தலைமை வகித்தார். கவுரவ தலைவர் வெங்கடாசலபதி முன்னிலை வகித்தார். விழாவை விஜயராகவன் தொகுத்து வழங்கினார். உதவி செயலாளர்கள் திருவேங்கடம், வசந்தகுமார், பொருளாளர் லோச்சனா கிருஷ்ணன், கவுரவ தலைவர்கள் சடகோபன், திலகராஜ், வெங்கடாஜலபதி, ஜெயக்குமார், ஸ்ரீதரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !