அருணாசலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்
ADDED :7 minutes ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆவணி மாத வளர் பிறை பிரதோஷ பூஜை நேற்று நடந்தது.
இதையொட்டி, கோவில் ஆயிரங்கால் மண்டபம் அருகிலுள்ள பெரிய நந்தி, கிளி கோபுரம் அருகிலுள்ள அதிகார நந்தி, தங்க கொடிமரம் அருகிலுள்ள சிறிய நந்தி ஆகியவற்றிற்கு, பால், பன்னீர், அபிஷேக பொடி, மஞ்சள், தேன், பஞ்சாமிர்தம், விபூதி, இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. அப்போது பக்தர்கள், ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என, பக்தி கோஷமிட்டு வழிபட்டனர். ஆவணி மாத பவுர்ணமி திதி நாளை (27ம் தேதி) காலை, 9:56 முதல், மறுநாள், 28ம் தேதி, காலை, 10:29 மணி வரை உள்ளதால், இந்த நேரத்தில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.