உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குமரன் குன்று கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மண்டல பூஜை நிறைவு

குமரன் குன்று கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மண்டல பூஜை நிறைவு

மேட்டுப்பாளையம்: குமரன் குன்று கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவிலில், மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது.


மேட்டுப்பாளையம் அருகே வடவள்ளி ஊராட்சி, குமரன் குன்றில் மிகவும் பழமை வாய்ந்த கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து கடந்த மாதம் 27 ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து மண்டல பூஜை, 12 நாட்களுக்கு நடந்தது. நேற்று மண்டல பூஜை நிறைவு விழா கோவில் வளாகத்தில் நடந்தது. பேரூர் திருமடம் ஓதுவார் அழியாவர்ணம் தலைமையில், மூலத்துறை சிவநெறித் திருத்தொண்டர்கள் குழந்தைவேல், சக்திவேல் ஆகியோர் யாக வேள்வி பூஜைகளை செய்தனர். இந்த விழாவில் கோவில் முன்னாள் திருப்பணி தலைவர் டி.கே.வி., பழனிசாமி, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் செல்வகுமார், முன்னாள் அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், பழனிசாமி, சரோஜினி, ராமச்சந்திரன், கோவில் செயல் அலுவலர் சபரீஷ்வரி, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கந்தசாமி, பெள்ளேபாளையம் முன்னாள் ஊராட்சி தலைவர் சிவக்குமார், கோவில் அர்ச்சகர்கள் சண்முகம், சண்முகசுந்தரம், பார்த்திபன், கண்ணன், குமரேசன் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !