புதுச்சேரி வாராகி அம்மன் கோவிலில் வளர்பிறை பஞ்சமி பூஜை
ADDED :3 minutes ago
புதுச்சேரி: குருமாம்பேட் வாராகி அம்மன் கோவிலில் வளர்பிறை பஞ்சமி சிறப்பு பூஜை நடந்தது.
குருமாம்பேட், ஹவுஸிங் போர்டு இந்திரா நகர் பகுதியில் அமைந்துள்ள யோக மாயா லலிதாம்பிகை கோவிலில் வளர்பிறை பஞ்சமி தின சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி, காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. பஞ்சமி தினத்தை முன்னிட்டு மாலை அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.