உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எமனேஸ்வரத்தில் சப்பரத்தில் சுவாமி உலா

எமனேஸ்வரத்தில் சப்பரத்தில் சுவாமி உலா

பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் ரத சப்தமி உற்சவத்தையொட்டி, சுவாமி அலங்கரிக்கப்பட்ட புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார்.  நேற்று காலையில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் முடிந்து, அலங்கரிக்கப்பட்ட புஷ்ப சப்பரத்தில் வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவியுடன் எழுந்தருளி வீதி உலா வந்தார். பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து, பின் கோயிலை அடைந்தது. இதையொட்டி, பக்தர்கள் வழிநெடுக நீர், மோர் பந்தல்கள் அமைத்திருந்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்ட்ரா சபை நிர்வாகிகள் செய்திருந்தனர். இதேபோல், பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் காலையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் சத்திரத்திற்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், மாலை திருவீதி உலா வந்து, கோயிலை அடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !