அணு பற்றிய தகவலை அன்றே அறிவித்த கம்பர்!
ADDED :4761 days ago
எங்கே இருக்கிறான் உன் நாராயணன்? என்று பிரகலாதனிடம் கேட்கிறான் இரண்யன். அவன் எங்கும் நிறைந்துஇருக்கிறான் என்று பிரகலாதன் பதிலளிக்கிறான். இதனை ராமாயணத்தில் சொல்ல வந்த கம்பர், சாணிலும் உளன், ஒரு தன்மை அணுவினை சத கூறிட்ட கோணிலும் உளன்! என்கிறார். அணுவை நூறு கூறாகப் பிளந்தால் உண்டாகும் துகளுக்கு கோண் என்று பெயர். இதையே தூணிலும் இருப்பான்! துரும்பிலும் இருப்பான் என்று சொல்வர். கோண் என்பது துரும்பை விட மிக மிக நுட்பமானது. அணுவை நாங்கள் தான் கண்டு பிடித்தோம் என்று எந்த வெளிநாட்டாருக்கும் சொல்லி கொள்ள உரிமையில்லை. அணுவில் நூறில் ஒரு பகுதியே கோண் என்று நமக்கெல்லாம் அறிவித்தாரே கம்பர். அவரே அணு பற்றிய தகவலை நமக்கு முதலில் அறிவித்தவர் என்று நாம் பெருமை கொள்ளலாம்.