உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காணிப்பாக்கம் கோவிலில் உண்டியல் வசூல் ரூ.48 லட்சம்

காணிப்பாக்கம் கோவிலில் உண்டியல் வசூல் ரூ.48 லட்சம்

நகரி: காணிப்பாக்கம் விநாயகர் கோவில் உண்டியல் மூலம், 48 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.சித்தூர் மாவட்டம், காணிப்பாக்கம் பகுதியில், சுயம்பு வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. இக் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர்.பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்த உண்டியலில், ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர்.நேற்று முன்தினம் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு, ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.கடந்த, 22 நாட்களில் பக்தர்கள் அளித்த காணிக்கை, 40 கிராம் தங்கம், 300 கிராம் வெள்ளி, 5,264 ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் அன்னதான உண்டியல் மூலம் 4,758 ரூபாய் வசூலானது புதிய தங்க ரதம் செய்யும் பணிக்காக வைக்கப்பட்டுள்ள சிறப்பு உண்டியலில், பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம், 4.60 லட்சம் ரூபாய் என, மொத்தம், 48 லட்சம் ரூபாய் கோவிலுக்கு வருமானம் கிடைத்துள்ளது. மேற்கண்ட தகவலை, கோவில் நிர்வாக அதிகாரி பூரண சந்திர ராவ் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !