நித்யகல்யாண பெருமாள் கோவிலில் வெண்ணெய்த்தாழி கண்ணன் உற்சவம்
ADDED :4819 days ago
மாமல்லபுரம்: திருவிடந்தை நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில், நேற்று வெண்ணெய்த்தாழி கண்ணன் உற்சவம் கோலாகலமாக நடந்தது.மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை, நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவ விழா, கடந்த மாதம் 24ம் தேதி துவங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய உற்சவமாக, கடந்த 28ம் தேதி, கருடசேவை உற்சவமும், அதைத் தொடர்ந்து, 30ம் தேதி, திருத்தேர் உற்சவமும் நடந்தது.நேற்று, வெண்ணெய்த்தாழி கண்ணன் உற்சவம் நடந்தது. காலை, வழக்கமான வழிபாடு முடிந்து, காலை 9:30 மணிக்கு, நித்யகல்யாணப் பெருமாள், அலங்கார பல்லக்கில், வெண்ணெய்த்தாழி கண்ணன் தோற்றத்தில் எழுந்தருளினார். சுவாமி, தாழியில் கைவிட்டு, வெண்ணெய் எடுத்து உண்ணும் காட்சியை பக்தர்கள் தரிசித்தனர்.