பொன்மாடசுவாமி சித்திரை விழா
ADDED :4575 days ago
ராஜபாளையம்: ராஜபாளையம் புதுப்பாளையம் பொன்மாட சுவாமி கோயிலில் சித்திரை விழா மூன்றுநாள்கள் நடந்தது. முதல்நாள் அய்யனார்கோயிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து, விசேஷ பூஜைகள் நடந்தன. இரண்டாம் நாளில், ஊர் கிணற்றில் இருந்து கரகம் எடுத்து வந்து, பூஜைகள் நடந்தன. மூன்றாம் நாளில், காணிக்கை செலுத்துதல், மஞ்சள் நீராட்டுவிழா, அன்னதானம் நடந்தது.