உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உச்சி மாகாளியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

உச்சி மாகாளியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

உடுமலை: உடுமலை போடிபட்டி உச்சி மாகாளியம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. உடுமலை போடிபட்டி உச்சி மாகாளியம்மன் கோவில் திருவிழா கடந்த 14ம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. விழாவையொட்டி, நேற்று விநாயகர் பூஜை நடந்தது. இன்று மாலை 4:30 மணிக்கு சீர் கொண்டு வருதல், இரவு 8:00 மணிக்கு சக்தி கும்பம் அழைத்தல் நிகழ்ச்சியும்; நாளை (22ம் தேதி) காலை 5:00 மணிக்கு திருக்கல்யாணம், காலை 7:00 மணிக்கு மாவிளக்கு, முளைப்பாரி கொண்டு வருதல், காலை 7:30 மணிக்கு பொங்கல் வைத்தல், மாலை 3:00 மணிக்கு பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. வரும் 23ம் தேதி காலை 7:30 மணிக்கு மஞ்சள் நீராடுதல், 24ம் தேதி மதியம் 12:00 மணிக்கு மகாபிஷேகம், அலங்காரம், தீபாராதனை மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !