ராம, கிருஷ்ண அவதாரத்தைப் போல பிற அவதார வழிபாடு அதிகமாகவில்லையே ஏன்?
ADDED :4570 days ago
சத்தியம், தர்மத்தை நிலைநாட்ட விஷ்ணு எடுத்தது ராம, கிருஷ்ண அவதாரம். மனிதனாகவே வாழ்ந்து காட்டிய அவதாரம் ராமர். தெய்வமாகவே மண்ணில் வாழ்ந்தவர் கிருஷ்ணர். வாழ்வில் எல்லா துன்ப அனுபவமும் ராமருக்கு உண்டானது. சந்தோஷமே வாழ்க்கை என துன்பத்தையும் கண்டு சிரித்தவர் கிருஷ்ணர். எனவே தான், இந்த இரண்டு அவதாரங்களையும் வணங்கும் வழக்கம் மக்கள் மத்தியில் அதிகமாகி விட்டது.