கருட புராணத்தை வீட்டில் வைத்துக் கொள்ளக் கூடாது என்பது ஏன்?
ADDED :4572 days ago
இறந்த பிறகு உடலில் இருந்து பிரியும் உயிரின் பயணத்தைப் பற்றியும், அந்த உயிர் செய்த பாவங்களினால் படும் கஷ்டத்தையும், இறந்த உயிருக்குச் செய்யவேண்டிய காரியங்களுக்கான காரணத்தையும் கூறும் நூல் கருடபுராணம். இதனால், வீட்டில் வைத்துக் கொள்ளக் கூடாது எனச் சிலர் கூறி வழக்கிலும் உள்ளது. இறந்த வீட்டில் காரியம் நடக்கும் நாட்களில் இதைப் படிப்பது விசேஷம்.