உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதி­கே­சவ பெருமாள் கோவிலில் கொடிமரம் ­பி­ர­திஷ்டை

ஆதி­கே­சவ பெருமாள் கோவிலில் கொடிமரம் ­பி­ர­திஷ்டை

இள்­ளலூர்: இள்­ளலூர் அமிர்­த­வள்ளி உட­னுறை ஆதி­கே­சவ பெருமாள் கோவிலில், கொடி­மர பிர­திஷ்டை, நேற்று கோலா­க­ல­மாக நடந்­தது.திருப்­போரூர் அடுத்த இள்­ள­லூரில் புகழ் பெற்ற ஆதி­கே­சவ பெருமாள் கோவில் உள்­ளது. பழமை வாய்ந்த இக்­கோ­விலை, முன்­னொரு காலத்தில், இப்­ப­கு­தியை ஆண்ட குறு­நில மன்னர் ஒருவர் தான், போரில் வெற்றி பெற்றால், பிர­யோக கரத்­துடன் கூடிய எம்­பெ­ரு­மானை பிர­திஷ்டை செய்­வ­தாக வேண்டி கொண்டார். அவ்­வாறே போரில் வெற்றி பெற்று, இக்­கோ­விலை நிறு­வினார் என, வர­லா­றாக கூறப்­ப­டு­கி­றது.சிறப்பு பெற்ற கோவிலை திருப்­பணிகள் செய்து கும்­பா­பி­ஷேகம் செய்ய பக்­தர்கள் முடிவு செய்­தனர். அதன்­படி, 10 லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்­பணிகள் முடிக்­கப்­பட்டு வரும், 16ம் தேதி கும்­பா­பி­ஷேகம் நடத்­தப்­ப­ட­உள்­ளது. இதை­யொட்டி, கோவிலில் பெரு­வி­ழாக்கள் நடத்­து­வ­தற்கு ஏது­வாக, 17 அடி உய­ரமும், 300 கிலோ எடையும் கொண்ட கொடி­மரம் கோவில் முகப்பில் பிர­திஷ்டை செய்­யப்­பட்­டது. புதிய கொடி­ம­ரத்­திற்கு சிறப்பு பூஜைகள் நேற்று காலை, 7:00 மணிக்கு நடத்­தப்­பட்­டது. கொடி மரத்­திற்கு கலை வேலை­பா­டு­க­ளுடன், 1 லட்சம் மதிப்பில் செப்பு தக­டுகள் பொருத்தும் பணி துவங்கி­யுள்­ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !