வனதுர்கையம்மனுக்கு பாலாபிஷேகம்
ADDED :4461 days ago
திரிசூல பர்வதமலை அடிவாரத்தில் உள்ள வன துர்கை அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. வனதுர்கை அம்மனுக்கு ஒவ்வொரு வருடமும் சிறப்பு அபிஷேகங்கள், பாலாபிஷேகம், ஆராதனைகள் செய்து திருவிழா நடைபெறுவது வழக்கம். பக்தர்கள் பர்வதமலை அடிவாரத்தில் அமைந்துள்ள பச்சையம்மன் கோயிலிலிருந்து 108 பால்குடங்களை ஊர்வலமாக எடுத்துச்சென்று வன துர்கையம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம், ஆராதனைகள் செய்தனர்.