கரிவலம் கோயிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :4393 days ago
திருவேங்கடம்: கரிவலம்வந்தநல்லூர் ஒப்பனையம்பாள் சமேத பால்வண்ணநாத சுவாமி கோயிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. பால்வண்ணநாதசுவாமி சன்னதி கொடிமரத்திற்கு அருகேயுள்ள நந்தீஸ்வரருக்கு பால், பன்னீர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், மாப்பொடி, மஞ்சள்பொடி, திரவியப்பொடி போன்ற அபிஷேகம் நடந்தது. பின்னர் மேளதாளத்துடன் பிரதோஷ நாயகன் சுவாமி சந்திரசேகரர் சுவாமி சன்னதி வெளிப்பிரகாரத்தில் மூன்றுமுறை பவனி, நந்தீஸ்வரருக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பிரதோஷ கமிட்டியினர், அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர். * மரத்தோணி அகிலாண்டேஸ்வரி சமேத தோணிபுரிசுவர சுவாமி கோயிலில் நடந்த பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு நந்தீஸ்வரருக்கு பல்வேறு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.