நடக்காததை நடத்திக்காட்டும் நரசிம்ம மந்திரம்!
ADDED :4407 days ago
நீங்கள் ஒரு முயற்சி எடுக்கிறீர்கள்! என்னவெல்லாமோ செய்து பார்க்கிறீர்கள். ஆனால், ஏதோ தடங்கல், இடைஞ்சல் என்று தலை தூக்கி அந்த முயற்சி நிறைவேறாமல் போய்விட்டது. நீங்கள் மனவருத்தத்துடன் இருக்கிறீர்கள். அப்படியானால், நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம் இதுதான். இந்த மந்திரம் நடக்காததையும் நடத்திக்காட்டும் தன்மையுடையது.யஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்திஹந்துபித்ருத்வம் அந்யேஷு அவிசார்ய தூர்ணம்ஸ்தம்பே அவதார தம் அநந்ய லப்யம் லக்ஷ்மி ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே. இந்த ஸ்லோகத்தைச் சொல்ல முடியாதவர்கள் பொருளைச் சொல்லுங்கள். பக்தியற்றவர்களால் அடைய முடியாதவனே! தாயின் கர்ப்பத்தில் அவதரித்தால் தாமதமாகுமென்று தூணில் அவதரித்தவனே! நினைத்த மாத்திரத்தில் பக்தர்களின் துன்பத்தைப் போக்குபவனே! லட்சுமி நரசிம்மனே! உனது திருவடியைச் சரணடைகிறேன்.