திருவிடைமருதூரில் திருமுறை மாநாடு!
ADDED :4347 days ago
திருவிடைமருதூர்: மகாலிங்க சுவாமி கோவிலில் 3 நாட்கள் நடைபெறும் ஓதுவாமூர்த்திகள், சிவனடியார்கள் பங்கேற்றுள்ள திருமுறை மாநாடு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இங்கு சிவனடியார்கள் சங்கமிக்கும் திருமுறை திருவிழாவாக இந்த மாநாடு நடைபெறுகிறது. முதல் அமர்வாக திருஞானசம்பந்தர் திருநாளாக தொடங்கிய விழாவில், தயானந்த சரஸ்வதி சுவாமிகள் மாநாட்டுக் கொடியை ஏற்றிவைத்து விழாவை தொடக்கிவைத்துப் பேசினார்.