திருவெண்ணெய்நல்லூர் கோவில்களில் சோமவார பூஜை
ADDED :4355 days ago
திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் நேற்று சோமவார பூஜை நடந்தது. காலை 6:00 மணிக்கு பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை 5:30 மணிக்கு தீபாராதனை நடந்தது. தெத்துபிள்ளையார் கோவிலில் காலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 6:00 மணிக்கு தீபாராதனையும் நடந்தது. அப்போது பிள்ளையார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.