உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செவ்வாய்க்கிழமை மஞ்சள் கயிறு மாற்றலாம்!

செவ்வாய்க்கிழமை மஞ்சள் கயிறு மாற்றலாம்!

சுமங்கலியின் அடையாளம், திருமாங்கல்யம் அணிந்திருக்கும் மஞ்சள்கயிறு தான். கயிறு அழுக்காகி விட்டால், மாற்ற வேண்டியது கட்டாயம். திங்கள், செவ்வாய், வியாழக்கிழமைகளில் காலை வேளையில் மாற்றிக் கொள்ளலாம். கிழக்குநோக்கி அமர்ந்து கொண்டு, குலதெய்வத்தையும், இஷ்டதெய்வத்தையும் பிரார்த்தித்து கயிறு மாற்றவேண்டும். மாலை, இரவு, ராகுகாலம், எமகண்ட வேளைகளை தவிர்க்க வேண்டும். புதுமஞ்சள் கயிறு மாற்றிய பின் மாங்கல்யத்திற்கு குங்குமம் இட வேண்டும். இதனால், தீர்க்க  சுமங்கலிபாக்கியம் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !