ரூ.94 லட்சம் மதிப்பில் கோவில் சிலைகள் பாதுகாப்பு மைய கட்டிடம்!
ADDED :4330 days ago
பெரம்பலூர்: பெரம்பலூரில் ரூ.94 லட்சம் மதிப்பில் கோவில் சிலைகள் பாதுகாப்பு மைய கட்டிடம் அமைக்கும் பணி தொடங்கியது. பெரம்பலூர் மாவட்டத்திற்கான சிலைகள் பாது காப்பு மைய கட்டிடம் கட்டு வதற்கு வடக்குமாதவி சாலையில் மதனகோபாலசுவாமி கோவிலுக்கு சொந்தமான மரகதவல்லிதாயார் மண்டப வளாகத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு, ரூ.94 லட்சம் செலவில் கட்டிட கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.