விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் ஆருத்ரா அபிஷேகம்!
திருவாரூர்: திருவாரூர் அருகே விளமல் பதஞ்சலி மனோகரர் திருக்கோவிலில் இன்று 17ம்தேதி இரவு 7.30 மணிக்கு திருச்சபையில் நடராஜபெருமான் பதஞ்சலி வியாக்கிரபாத முனிவர்களுக்கு அபிஷேகமும், ஆருத்ரா தரிசன பெருவிழா வான நாளை பதஞ் சலி வியாக்கிரபாத முனிவர்களுக்கு, தியாகேச பெருமான் பாததரிசனம் காட் சி அருளுதல் நிகழ்ச்சி நடக்கிறது. தில்லை நடராஜபெருமான் ஆனந்த திரு நடனத்தைக் கண்ட பதஞ்சலி வி யாக்கிரபாத மகரிஷிகள் சிவபாதம் காண, ஆருர் வந்து மார்கழித்திங்கள் திருவிளமலில் அஜபாவன நர்த்தனமாடி சிவபெருமான் (நடராஜர்) பதஞ் சலி-வியாக்கிரபா மகரிஷிகளுக்கு ரத்ரபாதம் காட்டி விளமலில் அருளியதும், திருவாரூரில் தியாகேசப்பெருமான் பதஞ்சலி வியாக்கிரபாத முனி வர்க ளுக் கு திருவடிக்காட்டி அருளியது ஆருத்ரா தரிசனம் என உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
மார்கழி மாத திருவாதிரை நாளன்று பிறவியில் இந்த திருப்பாத தரிசனத்தை காண்பவர்கள் சாப, பாவ விமோசனம்பெற்று முக்தி பெறுவார்கள் என்பது ஐதீகம். திருவாரூர் அருகே விளமல் பதஞ்சலி மனோகரர் திருக்கோவிலில் ஆண் டுதோறும் ஆருத்ரா தரிசன பெருவிழா மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது. தற்போது 10 ஆண்டு விழாவை நாளை 18ம்தேதி நடக்கிறது. இன்று 17ம்தேதி இரவு 7.30 மணிக்கு திருச்சபையில் நடராஜபெருமான் பதஞ்சலி வியாக்கிரபாத முனிவர்களுக்கு அபிஷேகமும், நாளை 18ம்தேதி அதி காலை 4 மணிக்கு நடராஜபெருமான்லிங்கத்தில் எழுந்தருளி பதஞ்சலி வியா க்கிரபாத மகரிஷிகளுக்கு பாத தரிசனம் அரு ளுதல், 4.45 மணிக்கு பதஞ்சலி வியாக்கிரபாத மகரிஷிகள் தியாக ராஜர் கோவிலுக்கு செல்லு தலுல், காலை 6 மணிக்கு பதஞ்சலி வியாக்கிரபாத முனிவர்களுக்கு, தியா÷ கச பெருமான் பாததரிசனம் காட்சி அருளுதல் நிகழ்ச் சியும் நடக்கிறது. திருவாதிரை நாளில் பதஞ்சலி வியாக்கரபாத முனிவர்களுக்கு தியா கேசப் பெருமான் காட்சி அருள்வது இடது பாத தரிசனம் ஆகும். இறைவன் அர்த்த நாரீஸ்வரராக இருக்கும் போது இடது பாகம் சக்தியின் பாதம் ஆனதால் இட து பாத தரிசனம் தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். குறிப்பாக தடைபடும் திருமணம் புத்திரபாக்கியம் இல்லாமை போன்ற வற்றை நீக்கி பூரண நலமும் செல்வ செழிப்பும் அருளுவது இடது பாத தரிசனம் ஆகும். இதில் பங்கேற்க 9489479896 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.