ரிஷிவந்தியம் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை
ADDED :4342 days ago
தியாகதுருகம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது. ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழாவை முன்னிட்டு மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு சிறப்பு தேனபிஷேகம் நடந்தது. பலிபீடம் அருகில் உள்ள நந்திக்கு அபிஷேகம் செய்து மலர் அலங்காரத்திற்கு பின் ஆராதனைகள் நடந்தன. உற்சவர் சிலை அலங்கரித்து கோவிலை சுற்றி தாலாட்டியபடி பக்தர்கள் வலம் வந்தனர். மகா தீபாராதனையில் பக்தர்கள் வழிபாடு நடத்தி பிரதோஷ முறைப்படி கோவிலை வலம் வந்து வணங்கினர். குருக்கள் நாகராஜ், சோமு பூஜைகளை செய்தனர். புக்குளம் கைலாச நாதர் கோவிலில் நடந்த பிரதோஷ பூஜையில் நந்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தினர். பெண்கள் விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினர்.