மேல்மருவத்தூருக்கு ஊர்வலமாக சென்ற பக்தர்கள்
ADDED :4334 days ago
வால்பாறை:வால்பாறையிலிருந்து மேல்மருவத்தூருக்கு பக்தர்கள் மாலை அணிந்து ஊர்வலமாக சென்றனர்.வால்பாறை கக்கன்காலனி, ஓம்சக்தி வார வழிபாட்டு மன்றத்தின் சார்பில், மேல்மருத்துவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல கடந்த மாதம் மாலை அணிந்தனர். நேற்று காலை வால்பாறை நகரில் உள்ள கோவிலில் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தன. பின்னர் பக்தர்கள் இருமுடி கட்டி, நகர் வழியாக ஊர்வலமாக புதிய பஸ் ஸ்டாண்டு சென்றனர். அங்கிருந்து 10 பஸ்களில் பக்தர்கள் மேல்மருத்துவத்தூருக்கு பயணம் செய்தனர்.இதற்கான ஏற்பாடுகளை வார வழிபாட்டு மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் முத்துமாரி தங்கம், துணைத்தலைவர் ஆனந்தகுமார், பொருளா ளர் பால்துரை உட்பட பலர் செய்திருந்தனர்.