மருதமலையில் தைப்பூசத் தேர் திருவிழா!
ADDED :4481 days ago
மருதமலை: சுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூசத் தேரோட்டம் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது. தைப்பூச தேரோட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு, மலை மீது அதிகப்படியான வாகனங்கள் வருவதால் பக்தர்களின் சிரமத்தைத் தவிர்க்கும் வகையில், ஜனவரி 17, 19 ஆகிய இரு தினங்கள் காலை முதல் இரவு வரை வாகனங்கள் மலைச்சாலையில் செல்ல அனுமதியில்லை.