கோயில் மானியம் உயர்வு: ஜெ., உத்தரவு!
ADDED :4476 days ago
சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 490 கோயில்களுக்கான மானியத்தை ரூபாய் ஒரு கோடியில் இருந்து ரூ.3 கோடியாக உயர்த்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்து அறநிலையத்துறையின் கீழ் வராத கோயில் பூசாரிகளின் ஓய்வூதியத்தை ரூ.1000 ஆக உயர்த்தியும் அவர் உத்தரவிட்டுள்ளார். 20 ஆண்டுகளுக்கு மேல் வேலை செய்து, 60 வயது பூர்த்தி அடைந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதிய உயர்வு வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.