அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :4268 days ago
திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் தை வெள்ளியை முன்னிட்டு நேற்று ஊஞ்சல் உற்சவம் நடந்தது. காலை 8:00 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை 5:00 மணிக்கு மங்களாம்பிகை அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரமும் நடந்தது. மாலை 6:00 மணிக்கு உற்சவர் அம்மனுக்கு அலங்காரம் செய்து, மூன்று முறை கோவிலில் உட்பிரகாரத்தில் வலம் வரச்செய்து, மாலை 7:00 மணிக்கு ஊஞ்சலில் வைத்து தாலாட்டினர்.பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் வெங்கட கிருஷ்ணன், திருஅருட்டுறைநாதன் அருட்சபையினர், குருக்கள் ரவி செய்திருந்தனர்.