உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தகிரீஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் விபச்சித்து முனிவருக்கு காட்சி!

விருத்தகிரீஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் விபச்சித்து முனிவருக்கு காட்சி!

விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரம்மோற்சவ ஆறாம் நாள் விழாவில், விபச்சித்து முனிவருக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி காட்சியளித்தார். விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக பிரம்மோற்சவம், கடந்த 6ம் தேதி துவங்கி 17ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி, ஆழத்து விநாயகர், விருத்தகிரீஸ்வரர், தாயார், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் சுவாமிகளுக்கு தினம் சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு வீதியுலா நடக்கிறது. ஆறாம் நாள் உற்சவத்தையொட்டி, காலை 6:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பகல் 12:15 மணிக்கு மேல் 1:30 மணிக்குள் விருத்தகிரீஸ்வரர் சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி விபச்சித்து முனிவருக்கு காட்சியளிக்கும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, விநாயகர் மூஞ்சூரு (எலி) வாகனத்திலும், சுப்ரமணியர் மயில் வாகனத்திலும், விருத்தாம்பிகை அன்னவாகனத்திலும், பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும், சண்டிகேஸ்வரர், விபசித்து முனிவர் ரிஷப வாகனத்திலும் வீதியுலா வந்து அருள்பாலித்தனர். ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !