புன்னை வனநாதர் கோவிலில் திருவாசக முற்றோதுதல் விழா
ADDED :4339 days ago
கரூர்: அரவக்குறிச்சி புன்னைவனநாதர் கோவிலில் திருவாக முற்றோதுதல் விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு புன்னைவன நாயகி, புன்னை வனநாதர் உள்பட அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஆயிரக் கணக்கான சிவனடி யார்கள் கலந்து கொண்டு திருவாசகத்தைப் பாடினர்.