அவலூர்பேட்டையில் சுவர்ணாபிஷேகம்
ADDED :4297 days ago
அவலூர்பேட்டை : அவலூர்பேட்டை அகத்தீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு சிறப்பு சுவர்ணாபிஷேகம், பாலாபிஷேகம், தீபாராதனையும், அகத்தீஸ்வரருக்கு சிறப்பு வழிபாடும் நடந்தது. இதேபோல் வளத்தி மங்களாம்பிகை சமேத மருதீஸ்வரர் கோவில் மற்றும் நொச்சலூர் திரிபுர சுந்தரி சமேத சந்திர மவுலீஸ்வரர் கோவில்களில் லிங்கேஸ்வரர், நந்திபெருமானுக்கு பாலாபிஷேகம், தீபாராதனை நடந்தது.