வித்தியாசமான பெயர்!
ADDED :4352 days ago
பெரும்பாலும் அரசமரம், ஆலமரம், வன்னிமரம் போன்றவற்றில்தான் பிள்ளையார் வீற்றிருப்பார். ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் மன்னர் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள தூங்கு மூஞ்சி மரத்தின் கீழ் ஒரு கணபதி காட்சி தருகிறார். பக்தர்கள் இவரை செல்லமாக தூங்குமூஞ்சி கணபதி என்றே அழைக்கின்றனர். ஆயினும் இவர் தூங்காமல் விழித்திருந்து பக்தர்களின் குறைகளைப் போக்கி வருகிறார்.