உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.46 லட்சம்

திருத்தணி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.46 லட்சம்

திருத்தணி : திருத்தணி முருகன் கோவில், உண்டியலில், பக்தர்கள், 46. 39 லட்சம் ரூபாய் ரொக்கமும், 345 கிராம் தங்கமும் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திருத்தணி முருகன் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை வழிபட்டு செல்கின்றனர். பக்தர்கள் தங்களது வேண்டு தலை நிறைவேற்ற, ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை காணிக்கையாக மலைக்கோவிலில் உள்ள உண்டியலில் செலுத்தினர். நேற்று முன்தினம், கோவில் தக்கார் ஜெயசங்கர், முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு, ஊழியர்களால் எண்ணப்பட்டது. இதில், 46.39 லட்சம் ரூபாய் ரொக்கமும், 345 கிராம் தங்கமும், இரண்டு கிலோ வெள்ளியும் கிடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !