உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி கோயிலில் சிவராத்திரி உற்சவம்!

மதுரை மீனாட்சி கோயிலில் சிவராத்திரி உற்சவம்!

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், பிப்.,27 இரவு முதல் பிப்., 28 அதிகாலை வரை, சிவராத்திரி உற்சவம் நடக்கிறது. இதை முன்னிட்டு, அம்மன், சுவாமி உற்சவர் சன்னதிகளில் விடிய, விடிய அபிஷேக, ஆராதனைகள் நடக்கிறது. பக்தர்கள் பால், தயிர், இளநீர், பன்னீர், பழவகைகள், தேன், மஞ்சள்பொடி, எண்ணெய் மற்றும் இதர அபிஷேகப் பொருட்களை பிப்., 17 மாலைக்குள், கோயில் உள்துறை அலுவலகத்தில் வழங்க வேண்டும், என இணை கமிஷனர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !