உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் லட்சார்ச்சனை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் லட்சார்ச்சனை!

திருவண்ணாமலை: மகாசிவராத்திரியை முன்னிட்டு, அண்ணாமலையார் கோவிலில், லட்சார்ச்சனை மற்றும் லட்ச தீபம் ஏற்றப்பட்டது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில், அண்ணாமலையார் மற்றும் உண்ணா முலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள், அண்ணாமலையாருக்கு, ஒரு லட்சம் அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர். மாலை, 4:00 மணி அளவில், ராஜகோபுரம் எதிரில், 108 தவில் மற்றும் நாதஸ்வர கலைஞர்கள், அண்ணாமலையாரை போற்றி, இசை வழிபாடு நடத்தினர். மாலை, 6:00 மணிக்கு, 24 ஏக்கர் பரப்பளவு கொண்ட அண்ணாமலையார் கோவில் வளாகம் முழுவதும், வண்ணம் கலந்த உப்புகளால், அம்மன் மற்றும் சிவபெருமான் ஓவியங்கள், பிரம்ம தீர்த்த குளக்கரை, கோவில் பிரகாரம் என, ஒரு லட்சம் தீபம் ஏற்றப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !