செல்லியாண்டியம்மன் கோவில் மாசித்திருவிழா
ADDED :4271 days ago
பவானி : ஈரோடு மாவட்டம், பவானியில் செல்லாண்டியம்மன் கோவில் மாசி மாத தேரோட்ட முக்கிய விழாவான சேறுபூசுதல், பொங்கல் வைத்தல், தட்டுமாற்றுதல் நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன. முன்னதாக அம்மனுக்கு பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. பெண்கள் மாவிளக்கு படைத்து தட்டு மாற்றிக்கொண்டார்கள். சிலர் வியாபாரம் செழிக்கவேண்டி காய்கறி மாலைகளை அணிந்துகொண்டு ஊர்வலம் நடத்தினர்.