உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நார்த்தாமலை முத்துமாரியம்மனுக்கு மார்ச் 23ம் தேதி பூச்சொரிதல் விழா

நார்த்தாமலை முத்துமாரியம்மனுக்கு மார்ச் 23ம் தேதி பூச்சொரிதல் விழா

புதுக்கோட்டை: நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு வரும் 23ம் தேதி அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடக்கிறது. நாரத மாமுனி தவமிருந்து அம்பாளை வழிபட்ட வரலாற்றுச் சிறப்புமிக்கது நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில். இங்கு ஆண்டுதோறும் பங்குனித் திருவிழா, 10 நாட்கள் நடப்பது வழக்கம். இந்தாண்டு திருவிழா வரும், 30ம் தேதி திருக்கொடியேற்றுடன் ஆரம்பமாகிறது. ஏப்ரல், 8ம் தேதி முடிய விழா தொடர்ந்து, 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏப்ரல், 7ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. இதில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசிக்க உள்ளனர். பக்தர்களின் வசதிக்காக ஏப்ரல், 7ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. பங்குனித் திருவிழாவை முன்னிட்டு நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் வரும், 23ம் தேதி பூச்சொரிதல் விழா நடக்கிறது. இதற்காக புதுக்கோட்டை மட்டுமின்றி திருச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் பூத்தட்டுகள் எடுத்துவந்து அம்மனுக்கு அர்ச்சனை செய்கின்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், மண்டகபடிதாரர்கள் மற்றும் விழா கமிட்டியினர் செய்துவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !