உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசி மாரியம்மன் கோவிலில் நாளை கொடியேற்றம்!

அவிநாசி மாரியம்மன் கோவிலில் நாளை கொடியேற்றம்!

அவிநாசி : கருவலூர் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கொடியேற்றத்துடன் நாளை துவங்குகிறது. திருப்பூர் மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற கருவலூர் மாரியம்மன் கோவில் பங்குனி தேர்த்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இரவு, சிம்ம வாகனத்தில் மாரியம்மன் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 16ல் பூத வாகனம், 17ல் ரிஷப வாகனம், 18ல் புஷ்ப விமான மலர் பல்லக்கு, அம்மன் அழைப்பு, திருக்கல்யாண உற்சவம், யானை வாகனத்தில் அம்மன் உலா நடக்கும். வரும் 19ம் தேதி காலை 6.00 மணிக்கு தேருக்கு அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அன்று மாலை 3.00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. மீண்டும், 20, 21ல் தேரோட்டம் நடந்து, நிலையை அடையும். 22ல் தெப்போற்சவம், காமதேனு வாகனத்தில் அம்மன் வீதியுலா, 23ம் தேதி தரிசன காட்சி, சப்பரத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. அன்றிரவு அன்னவாகனத்தில் அம்மன் வீதியுலா, மஞ்சள் நீர் மற்றும் கொடியிறக்கம் நடைபெறும். 26ம் தேதி பாலாபிஷேகம், மறுபூஜையுடன் தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !