உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவில் தேரோட்டம் நிறைவு!

மாரியம்மன் கோவில் தேரோட்டம் நிறைவு!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில், தேர்த்திருவிழா நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் கடந்த மாதம் 18ம் தேதி துவங்கியது. கடந்த மாதம் 25ம் தேதி இரவு 11:00 மணிக்கு கம்பம் நடுதல் நிகழ்ச்சியும்; பிப்.,4ம் தேதி பூவோடு வைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனைகள்; பக்தர்கள் பூவோடு எடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வெள்ளித்தேரோட்ட நிகழ்ச்சி கடந்த 12ம் தேதி இரவு 8:30 மணிக்கு துவங்கியது. முதல் நாளில், கோவிலிலிருந்து, மார்க்கெட் வீதி வழியாக வந்து வெங்கட்ரமணன் வீதியிலும்; இரண்டாம் நாளான நேற்றுமுன்தினம் தேரோட்டம் துவங்கி, உடுமலை ரோடு வழியாக சத்திரம்வீதியில் தேர்நிலை நிறுத்தப்பட்டது. நிறுத்தப்பட்டிருந்த தேரின் சக்கரத்தில், உப்பு, மிளகு கொட்டி, பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். இறுதி நாளான நேற்று சத்திரம் வீதியிலிருந்து இரவு 8:15 மணிக்கு புறப்பட்டு, தெப்பக்குளம் வீதி வழியாக இரவு 10:30 மணிக்கு தேர்நிலைக்கு வந்தடைந்தது. இதையொட்டி, சத்திரம்வீதி, தெப்பக்குளம் வீதி வழித்தடத்தில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. தேர் நிலைக்கு வந்ததையடுத்து, தொடர்ந்து, பரிவேட்டை நிகழ்ச்சியும்; கோவில் வளாகத்திலேயே சம்பிரதாயதுக்காக, தெப்பத்தேர் வைபவம் நடந்தது. தொடர்ந்து, இன்று அம்மன் மஞ்சள் நீராடுதல், இரவு 9:00மணிக்கு கம்பம் எடுத்தல்; 17ம் தேதி இரவு 8:00 மணிக்கு மகா அபிேஷகமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாட்டினை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !