நாமக்கல் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் தேரோட்டம்
ADDED :4250 days ago
பரமத்தி வேலூர் : ;நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் மிகவும் பிரசித்திபெற்ற மகா மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் திருத் தேர் விழாவை முன்னிட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை கம்பம் நடும் விழாவுடன் திருவிழா தொடங்கியது. வெள்ளிக்கிழமை பூச்சொரிதல் விழா நடைபெற்றது. வருகிற 23-ம் தேதி மறுகாப்புக் கட்டுதலும், கிராம சாந்தியும் நடைபெறுகிறது. வரும் 30ஆம் தேதி வரை தினந்தோறும் இரவு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெறுகிறது. 31-ம் தேதி வடிசோறு, பரிவட்டம் சூட்டுதல் , ஏப்.1ம் தேதி காலை மகா மாரியம்மன் கோயில் திருத் தேரோட்டம் நடைபெறுகிறது.