உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னியாகுமரி பகவதி அம்மன்.. அன்னதான உண்டியல் மூலம் ரூ.57 ஆயிரம் வசூல்!

கன்னியாகுமரி பகவதி அம்மன்.. அன்னதான உண்டியல் மூலம் ரூ.57 ஆயிரம் வசூல்!

நாகர்கோவில் : கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தினமும் பகல் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக இந்த கோவிலில் தமிழக அரசின் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை மூலம் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அன்னதான திட்டத்திற்காக கோவிலில் உள்ள வாடாவிளக்கு மண்டபத்தில் தனியாக ஒரு உண்டியல் வைக்கப்பட்டு உள்ளது. கோவிலுக்க வரும் பக்தர்கள் அன்னதான திட்டத்திற்கான காணிக்கையை இந்த உண்டியலில் செலுத்துவது வழக்கம். இந்த அன்னதான உண்டியல் மட்டும் மாதந்தோறும் திறந்து எண்ணப்படும். மார்ச் மாதத்திற்கான அன்னதான உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களில் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான சோணாச்சலம், நாகர்கோவில் இந்து சமய அறநிலை ஆட்சித்துறை ஆய்வாளர் சாரதா, கோவில் தலைமை கணக்காளர் ராஜேந்திரன், கணக்கர் ஸ்ரீராமசந்திரன் ஆகியோர் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது. இந்த உண்டியல் எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதில் ரூ. 57 ஆயிரத்து 509 காணிக்கையாகி வசூலாகி இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !