உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலம் சுப்ரமணியர் கோவிலில் கிருத்திகை விழா!

மயிலம் சுப்ரமணியர் கோவிலில் கிருத்திகை விழா!

மயிலம்: மயிலம் சுப்ரமணியர் கோவிலில் பங்குனி கிருத்திகை விழா நேற்று நடந்தது. மயிலம் வள்ளி,தெய்வானை, சுப்ரமணியர் சுவாமி திருக் கோவிலில் பங்குனி மாத கிருத்திகை விழா நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு வழிபாடுகள் மகா தீபாராதனைகள் நடந்தது. காலை 11 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம் நடந்தது. சுவாமி தங்க கவசத்தில் அருள்பாலித்தார். பிற்பகல் 1 மணிக்கு கோவில் மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 9 மணிக்கு உற்சவர் கிரிவலம் நடந்தது. விழா ஏற்பாடுகளை மயிலம் ஆதீனம் 20ம் பட்ட சுவாமி சிறப்பாக செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !